Monday, April 26, 2010

நிலா துணை


இரவு நேரம்
ஜன்னல் வழியே
கசியும் நிலா!

நிலவொளியில் மின்னும்
செல்ல மகள்
என்னருகே படுத்துக் கொண்டு
கேட்கின்றாள் "அம்மா, இந்த நிலாவ பாத்து
நீ என்ன நினைச்சுக்குவே?

விடையறுக்காமல் இருக்கவே,
அவளே மீண்டும் தொடர்ந்தாள்
"நான் உன்ன தான் நினைச்சுக்குவேன்.
ஊருக்கும் போகும் போது
அதுகிட்ட தான் சொல்லிட்டு போனேன்."

"என்ன சொன்ன?"

"எனக்கு பதிலா உன்ன பாத்துக்க சொல்லி
தினம் அது வந்து உன்ன பாத்துகிச்சு தானே!!"

சொல்லி வைத்த மாதிரி
கேட்டது நிலவின் சிரிப்பொலி !

No comments: